கோவையிலிருந்து கேரளத்திற்கு கடத்தப் படும் கனிம வளம்: தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச்...

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள என்பது நகைச்சுவை: வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர்...

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது: தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் குற்றச்சாட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக...

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்: வாழ்க திராவிட மாடல் அரசு போக்குவரத்துக் கழக பராமரிப்பு!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து...

அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: சமூகநீதியையும், நேர்மையையும் கடைபிடித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை...

நடப்பாண்டும் தமிழ்க் கட்டாயப் பாடம் இல்லை: அரசின் அலட்சியமே காரணம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26ஆம் நாள் தொடங்கவிருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச்சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு...

சரக்குந்து மீது பேருந்து உரசியதில் படியில் பயணித்த 4 மாணவர்கள் சாவு: இன்னும் எத்தனை உயிர்களை இழக்க போகிறோம்?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் வேகமாக சென்று நின்ற பேருந்து, நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் உரசியதில், படியில் பயணித்த 4 மாணவர்கள்...

பேரூராட்சிகளில் 8130 பணியிடங்கள் ரத்து: இது தான் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள்தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில்...

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழப்பு: உச்சநீதிமன்றத்தில் விரைவாக தடையாணை பெற வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் ஆன்லைன்  சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்....

வருவாய்த்துறையினரின் பணியிறக்கப் பாதுகாப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி: மற்ற கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல் பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டு...