பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (27.03.2024) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிப்பதற்காக தங்களின் ஊடகத்திலிருந்து செய்தியாளரையும், ஒளிப்பதிவாளர்/ புகைப்படக் கலைஞரையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
வழக்கறிஞர் க.பாலு,
செய்தித்தொடர்பாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி