அண்ணல் அம்பேத்கரின் 68-ஆவது நினைவு நாள்: உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா மாலை அணிவித்து மரியாதை

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல்  அம்பேத்கர் அவர்களின் 68-ஆவது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.  அதையொட்டி தைலாபுரம் தோட்டத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள  அவரது திருவுருவச் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் மொ.ப.சங்கர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ்  உள்ளிட்ட நிர்வாகிகள்  உடன் உள்ளனர்.