வன்னியர் சங்க 45-ஆம் ஆண்டு விழா: தைலாபுரத்தில் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார் மருத்துவர் அய்யா!

வன்னியர் சங்கத்தின் 45-ஆம் ஆண்டு விழாவையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கத்தின் கொடியை நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.